இரா பாவேந்தன் பதிவுகள்
Wednesday, December 7, 2011
தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம் திராவிட பெருந்தகை டி.எம்.நாயர்
http://viduthalai.in/new/page3.html03-12-2011 ஞாயிறுமலர் பக்கம் 3
லேபிள்கள்:
டி.எம்.நாயர்,
தஞ்சை மாவட்டம்,
நீர்ப்பாசனம்
Sunday, November 27, 2011
கருப்பு சிகப்பு இதழியல் நூல் குறித்து மீண்டும் கவிக்கொண்டல் இதழ்...
முனைவர் இரா.பாவேந்தன் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
”அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்க இதழியலின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்தும் வகையில் கறுப்பு சிகப்பு இதழியல் என்ற தலைப்பிலான தொகுப்பு நூலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.இத் தொகுப்பில் கழகக்குரல் ஏட்டில்(1976) ஆம் ஆண்டு தாங்கள் எழுதிய “குற்றம் செய்யத் தூண்டுகிறாதா குமுதம் என்ற தலைப்பிலான் கட்டுரையை இணைக்க விரும்புகின்றேன். இதற்கு ஒப்புதல் வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்”
என கேட்டு மடல் எழுதியிருந்தார்.நானும் உடன் அதற்கு ஒப்புதல் வழங்கினேன்.அத் தொகுப்பு நூல் வெளிவந்த்தும் அவர் எனக்கு அதனை அனுப்பிவைத்தார்.அதில் எனது மூன்று கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.மா.செங்குட்டுவன் என்னும் பெயரில் இரண்டு கட்டுரைகளும் சேனா என்னும் புனைப்பெயரில் நான் எழுதிய கட்டுரை ஒன்றும் அதில் சேர்க்கப்பட்டுருந்தன.1.ஏடுகள் வளர்த்த் இயக்கம்,2.குற்றம் செய்யத்தூண்டுகிறாதா குமுதம்,3.சிரிப்பு தான் வருகுதையா !பலே பாண்டியா என்பவையே அவை.
அந்தக் கட்டுரைகளைப் படித்த போது இப்போதும் அக்கட்டுரைகள் மிகப் பொருத்த்மாகவே இருக்கக் கண்டேன் (இத் தொகுப்பு நூல் பற்றிய் மதிப்புரை பின்னர் வரும்)
சேனா எனப் புனைபெயரில் நான் எழுதிய கட்டுரையைப் படித்துப் பார்த்தால் கம்யூனிஸ்டுத் தோழர் தா.பாண்டியன் அன்று முதல் இன்று வரை கிஞ்சிற்றும் தமது இயல்பினின்று மாறவில்லை என்பது புரியும் அக் கட்டுரை தான் அடுத்தப் பக்கத்தில் வெளியாகியுள்ளது(13-16) அக் கட்டுரையைப் படித்து பாருங்கள்...(மா.செ)
(மா.செங்குட்டுவன் திராவிட இயக்க மூத்த இதழியலாளர்,சென்னையில் வசிப்பவர்)>
நன்றி:மீண்டும் கவிக்கொண்டல் இதழ் நவம்பர் 2011 பக் 12)
”அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்க இதழியலின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்தும் வகையில் கறுப்பு சிகப்பு இதழியல் என்ற தலைப்பிலான தொகுப்பு நூலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.இத் தொகுப்பில் கழகக்குரல் ஏட்டில்(1976) ஆம் ஆண்டு தாங்கள் எழுதிய “குற்றம் செய்யத் தூண்டுகிறாதா குமுதம் என்ற தலைப்பிலான் கட்டுரையை இணைக்க விரும்புகின்றேன். இதற்கு ஒப்புதல் வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்”
என கேட்டு மடல் எழுதியிருந்தார்.நானும் உடன் அதற்கு ஒப்புதல் வழங்கினேன்.அத் தொகுப்பு நூல் வெளிவந்த்தும் அவர் எனக்கு அதனை அனுப்பிவைத்தார்.அதில் எனது மூன்று கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.மா.செங்குட்டுவன் என்னும் பெயரில் இரண்டு கட்டுரைகளும் சேனா என்னும் புனைப்பெயரில் நான் எழுதிய கட்டுரை ஒன்றும் அதில் சேர்க்கப்பட்டுருந்தன.1.ஏடுகள் வளர்த்த் இயக்கம்,2.குற்றம் செய்யத்தூண்டுகிறாதா குமுதம்,3.சிரிப்பு தான் வருகுதையா !பலே பாண்டியா என்பவையே அவை.
அந்தக் கட்டுரைகளைப் படித்த போது இப்போதும் அக்கட்டுரைகள் மிகப் பொருத்த்மாகவே இருக்கக் கண்டேன் (இத் தொகுப்பு நூல் பற்றிய் மதிப்புரை பின்னர் வரும்)
சேனா எனப் புனைபெயரில் நான் எழுதிய கட்டுரையைப் படித்துப் பார்த்தால் கம்யூனிஸ்டுத் தோழர் தா.பாண்டியன் அன்று முதல் இன்று வரை கிஞ்சிற்றும் தமது இயல்பினின்று மாறவில்லை என்பது புரியும் அக் கட்டுரை தான் அடுத்தப் பக்கத்தில் வெளியாகியுள்ளது(13-16) அக் கட்டுரையைப் படித்து பாருங்கள்...(மா.செ)
(மா.செங்குட்டுவன் திராவிட இயக்க மூத்த இதழியலாளர்,சென்னையில் வசிப்பவர்)>
நன்றி:மீண்டும் கவிக்கொண்டல் இதழ் நவம்பர் 2011 பக் 12)
Friday, November 25, 2011
Sunday, November 13, 2011
Thursday, November 10, 2011
தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்

தொகுப்பாளர்: திராவிடர் இயக்க ஆய்வாளர் அருணாஅரசுகோ பாவேந்தன்
(அன்றைய சென்னை மாகாணத் தில் திராவிடர் இயக்கத்தின் தாய்க் கழகமான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பை 1916ஆம் ஆண்டு தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர் டி.எம். நாயர் (1868 _ 1919). பாலக்காடு மாவட்டம் திரூரில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர் தந்தை பெரியாரால் திராவிட லெனின் என போற்றப் பட்டவர். பொது வாழ்க்கையில் 1904ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த டி.எம். நாயர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியவர். காலனிய அரசு உருவாக்கிய தொழிற்சாலை களுக்கான தொழி லாளர் ஆணையத்தின் முக்கிய உறுப் பினராகச் செயல்பட்டவர். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக 1912-_1916 கால கட்டத்தில் பணியாற்றிய போது தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்பற்றி பட்டுக் கோட்டையில் நடந்த தஞ்சாவூர் ஜில்லா மாநாட்டில் ஆற்றிய உரையின் பகுதிகளை சென்னை யிலிருந்து வெளிவந்த பிழைக்கும் வழி மாத இதழ் நவம்பர் (1912) டிசம்பர் (1912) இதழ்களில் வெளியிட்டுள்ளது. டி.எம். நாயரின் வாழ்க்கை வரலாற்றெழுதுதலுக்கு உதவும் இந்த அரிய ஆவணம் முதன்முறையாக மறுவெளியீடு செய்யப்படுகின்றது.)
தஞ்சாவூர் ஜில்லா கான்ஃபரென்ஸ்
நாளது நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று பட்டுக் கோட்டையில் தஞ்சாவூர் ஜில்லா கான்ஃபரென்ஸ் நடந்தது. அப்பொழுது சென்னையில் பிரபல வைத்யரும், முனிஸிபல் கமிஷ னரும், இப்போது சென்னை லெஜிஸ் லேடிவ் கௌன்ஸில் மெம்பராய் எலெக்ஷன் செய்யப் பெற்றவருமான டாக்டர் டி.எம்.நாயர் அக்ராஸனம் வகித்து, தஞ்சாவூர் ஜில்லா நீர்ப் பாசனத்தைப் பற்றியும், அந்த ஜில்லா விலிருந்து கூலிகள் அந்ய தேசங் களுக்குப் போவதைப் பற்றியும், டிப்பைப் பற்றியும், ஸ்தல சுய ஆட்சியைப் பற்றி யும் பேசினார். அதன் பிறகு கான்ப ரென்ஸில் பல தீர்மானங்கள் செய்யப் பட்டன.
டாக்டர் நாயர் நீர்ப் பாச னத்தைப் பற்றிப் பேசியதையும் கான்ப ரென்ஸில் நடந்த தீர்மானங்களைப் பற்றியும் இந்த ஸஞ்சிகையில் யெழுதி யிருக்கிறோம். டாக்டர் நாயர் பேசிய மற்ற விஷயங்களைப் பற்றி அடுத்த ஸஞ்சிகையில் விவரிப்போம்.
தஞ்சாவூர் ஜில்லாவில் அநேக புத்திமான்கள் இருப்பது போலவே ராஜதானியிலுள்ள மற்ற ஜில்லாக்களை உத்தேசித்து தஞ்சாவூர் ஜில்லா நிலத் தின் வளப்பமும் ச்லாக்யமாயிருக்கிறது. ஆனால் நிலம் விளைவதும் விவஸாயம் கடைத்தேறுவதும் மழையையும் காவேரியில் வரும் ஜலத்தையும் பொறுத்திருக்கிறது.
ஆப்ரிக்காவில் இஜிப்ட் என்பதாக ஒரு தேசம் இருக்கிறது. அதில் நைல் என்பதாக ஒரு பெரிய நதி ஓடுகிறது. லார்ட் ரோஸ்பரி என்பவர் ஒரு ஸமயம் இஜிப்ட் தேசத்தைப் பற்றி பேசியபோது இஜிப்ட் தேசமே நைல் நதியாகும், நைல் நதியே இஜிப்ட் தேசமாகும் என்றார். அப்படியே நாமும் தஞ்சாவூரே காவேரி நதியாகும், காவேரி நதியே தஞ்சாவூர் ஜில்லாவாகும் என்று சொல்வதும் ஸரியாகும்.
காவேரியில் சலாக்யமான வண்டல் வருவதால் நாளது வரையில் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு தென்னிந் தியாவின் தோட்டம் என்று கௌரவம் இருந்து வருகிறது. இந்தக் காவேரி இல்லாவிட்டால் தஞ்சையின் நிலைமை மிகவும் குறைவு அடைந்திருக்கும். இந்த விஷயம் வெகுகாலமாகத் தெரிந்ததே. இதை உத்தேசித்து ஹிந்து ராஜாக்கள் வெகுகாலத்துக்கு முன்னாலேயே காவேரியிலிருந்து பாசனத்துக்கான வேலைகள் ஏற்பாடு செய்ய ஆரம் பித்தார்கள். இங்கிலீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுவதற்கு முன்னாலேயே இவை ஆரம்பிக்கப்பட்டன.
அநேக ஆறுகளிலுள்ள ஜலத்தைத் தேக்கி பக்கத்தில் உள்ள நிலங்களுக்குப் பாய்ச்சுவதற்குக் கட்டிய பழைய கட்டிடங்கள் இன்னும் அநேகம் இருக்கின்றன.
அவைகளால் தஞ்சாவூர் அரசர்கள் நீர்ப்பாசன விஷயமாய் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டி ருந்தார்கள் என்பது தெரிகிறது. க்ராண்ட் அணைக்கட்டு என்று சொல் லப்படும் கல்லணையுங் கூட வெகு காலத்துக்கு முன்னால் கட்டப்பட்டதே.
சில வருஷங்களுக்கு முன்னால் சில மாறுதல்கள் மாத்திரம் செய்யப்பட்டு தூக்கு ஷட்டர்கள் போட்டிருக் கிறார்கள். உண்மையில், 1836 ஆம் வருஷத்தில் ஸர் ஆர்தர் காட்டன் என்பவர் அப்பர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் மேல் அணைக்கட்டு கட்டின வரையில், தஞ்சாவூரார்கள் ஹிந்து அரசர்கள் செய்த பாசன ஏற்பாட்டின் பலனையே அடைந்து வந்தார்கள்.
1801 ஆம் வருஷத்தில் ப்ரிட்டிஷார் தஞ்சாவூரை தமது வசம் அடைந்ததற்கு முன் மாத்திரம் தேசமானது குழப்பமான நிலைமையில் இருந்ததால் காவேரி நீராரம்பங்களின் பாசனம் மிகவும் கெடுதலாயிருந்தது.
கம்பெனியார் தஞ்சாவூரைக் கைவசப் படுத்திக் கொண்டவுடனே காவேரி நீராரம்பங்களின் பாசனத்தை வ்ருத்தி செய்வதற்கு வேண்டிய ப்ரயத்னங்கள் செய்யப்பட்டன.
ஆரம்பத்தில் காவேரியில் உள்ள அதிக மணலை அப்புறப் படுத்துவதிலேயே வெகுவாய் ப்ரயத்னங்கள் செய்யப் பட்டன. ஆனால் அந்த முயற்சிகளால் அதிக பலன் ஒன்றும் உண்டாகவில்லை. கொள்ளி டத்தில் தலைப்பில் அப்பர் அணைக் கட்டுக் கட்டினபிறகுதான் காவேரிக்கு நன்றாய் ஜலம் வரலாயிற்று.
இப்படி மேல் அணைக்கட்டு கட்டினதால் கொள்ளிடத்திலிருந்து பிரியும் வாய்க்கால்களுக்கு ஜலம் குறைந்து போயிற்று. அதனால் வரும் ஜலநஷ்டத்துக்கு ஈடு செய்ய லோயர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் கீழ் அணைக்கட்டு ஒன்று 70 மையி லுக்கு அப்பால் கட்ட வேண்டியதா யிற்று.
அதன் பிறகு 1887_-1889 ஆம் வருஷத்தில் கல்லணையில் காவேரி, வெண்ணாறு, ஹெட் ரெகுலேடர்கள் கட்டவே, காவேரி, வெண்ணாறு இந்த இரண்டு நதிகளிலும் ஜலம் போவதை ஒழுங்குபடுத்துவது ரொம்ப ஸுலப மாயிற்று.
பிற்பாடு செய்த சீர்திருத் தங்கள் எல்லாம் வெள்ள காலத்தில் ஜலத்தை சீர்படுத்தவும் ஜலத்தை ஸரிவர வாய்க்கால்களில் பாய்ச்சவுமே செய்யப்பட்டவை. இவைகளால் காவேரி பாசன ஏற்பாட்டுக்கும் இந்தி யாவிலுள்ள மற்ற பாசன ஏற்பாடுகளுக் கும் ரொம்ப வித்யாஸமிருக்கிறது.
(தொடரும்) (நன்றி.விடுதலை மலர் 05.11.2011(அன்றைய சென்னை மாகாணத் தில் திராவிடர் இயக்கத்தின் தாய்க் கழகமான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற அமைப்பை 1916ஆம் ஆண்டு தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர் டி.எம். நாயர் (1868 _ 1919). பாலக்காடு மாவட்டம் திரூரில் பிறந்த தாரவாத் மாதவன் நாயர் தந்தை பெரியாரால் திராவிட லெனின் என போற்றப் பட்டவர். பொது வாழ்க்கையில் 1904ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த டி.எம். நாயர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியவர். காலனிய அரசு உருவாக்கிய தொழிற்சாலை களுக்கான தொழி லாளர் ஆணையத்தின் முக்கிய உறுப் பினராகச் செயல்பட்டவர். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக 1912-_1916 கால கட்டத்தில் பணியாற்றிய போது தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்பற்றி பட்டுக் கோட்டையில் நடந்த தஞ்சாவூர் ஜில்லா மாநாட்டில் ஆற்றிய உரையின் பகுதிகளை சென்னை யிலிருந்து வெளிவந்த பிழைக்கும் வழி மாத இதழ் நவம்பர் (1912) டிசம்பர் (1912) இதழ்களில் வெளியிட்டுள்ளது. டி.எம். நாயரின் வாழ்க்கை வரலாற்றெழுதுதலுக்கு உதவும் இந்த அரிய ஆவணம் முதன்முறையாக மறுவெளியீடு செய்யப்படுகின்றது.)
தஞ்சாவூர் ஜில்லா கான்ஃபரென்ஸ்
நாளது நவம்பர் மாதம் 22 ஆம் தேதியன்று பட்டுக் கோட்டையில் தஞ்சாவூர் ஜில்லா கான்ஃபரென்ஸ் நடந்தது. அப்பொழுது சென்னையில் பிரபல வைத்யரும், முனிஸிபல் கமிஷ னரும், இப்போது சென்னை லெஜிஸ் லேடிவ் கௌன்ஸில் மெம்பராய் எலெக்ஷன் செய்யப் பெற்றவருமான டாக்டர் டி.எம்.நாயர் அக்ராஸனம் வகித்து, தஞ்சாவூர் ஜில்லா நீர்ப் பாசனத்தைப் பற்றியும், அந்த ஜில்லா விலிருந்து கூலிகள் அந்ய தேசங் களுக்குப் போவதைப் பற்றியும், டிப்பைப் பற்றியும், ஸ்தல சுய ஆட்சியைப் பற்றி யும் பேசினார். அதன் பிறகு கான்ப ரென்ஸில் பல தீர்மானங்கள் செய்யப் பட்டன.
டாக்டர் நாயர் நீர்ப் பாச னத்தைப் பற்றிப் பேசியதையும் கான்ப ரென்ஸில் நடந்த தீர்மானங்களைப் பற்றியும் இந்த ஸஞ்சிகையில் யெழுதி யிருக்கிறோம். டாக்டர் நாயர் பேசிய மற்ற விஷயங்களைப் பற்றி அடுத்த ஸஞ்சிகையில் விவரிப்போம்.
தஞ்சாவூர் ஜில்லாவில் அநேக புத்திமான்கள் இருப்பது போலவே ராஜதானியிலுள்ள மற்ற ஜில்லாக்களை உத்தேசித்து தஞ்சாவூர் ஜில்லா நிலத் தின் வளப்பமும் ச்லாக்யமாயிருக்கிறது. ஆனால் நிலம் விளைவதும் விவஸாயம் கடைத்தேறுவதும் மழையையும் காவேரியில் வரும் ஜலத்தையும் பொறுத்திருக்கிறது.
ஆப்ரிக்காவில் இஜிப்ட் என்பதாக ஒரு தேசம் இருக்கிறது. அதில் நைல் என்பதாக ஒரு பெரிய நதி ஓடுகிறது. லார்ட் ரோஸ்பரி என்பவர் ஒரு ஸமயம் இஜிப்ட் தேசத்தைப் பற்றி பேசியபோது இஜிப்ட் தேசமே நைல் நதியாகும், நைல் நதியே இஜிப்ட் தேசமாகும் என்றார். அப்படியே நாமும் தஞ்சாவூரே காவேரி நதியாகும், காவேரி நதியே தஞ்சாவூர் ஜில்லாவாகும் என்று சொல்வதும் ஸரியாகும்.
காவேரியில் சலாக்யமான வண்டல் வருவதால் நாளது வரையில் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு தென்னிந் தியாவின் தோட்டம் என்று கௌரவம் இருந்து வருகிறது. இந்தக் காவேரி இல்லாவிட்டால் தஞ்சையின் நிலைமை மிகவும் குறைவு அடைந்திருக்கும். இந்த விஷயம் வெகுகாலமாகத் தெரிந்ததே. இதை உத்தேசித்து ஹிந்து ராஜாக்கள் வெகுகாலத்துக்கு முன்னாலேயே காவேரியிலிருந்து பாசனத்துக்கான வேலைகள் ஏற்பாடு செய்ய ஆரம் பித்தார்கள். இங்கிலீஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி ஏற்படுவதற்கு முன்னாலேயே இவை ஆரம்பிக்கப்பட்டன.
அநேக ஆறுகளிலுள்ள ஜலத்தைத் தேக்கி பக்கத்தில் உள்ள நிலங்களுக்குப் பாய்ச்சுவதற்குக் கட்டிய பழைய கட்டிடங்கள் இன்னும் அநேகம் இருக்கின்றன.
அவைகளால் தஞ்சாவூர் அரசர்கள் நீர்ப்பாசன விஷயமாய் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டி ருந்தார்கள் என்பது தெரிகிறது. க்ராண்ட் அணைக்கட்டு என்று சொல் லப்படும் கல்லணையுங் கூட வெகு காலத்துக்கு முன்னால் கட்டப்பட்டதே.
சில வருஷங்களுக்கு முன்னால் சில மாறுதல்கள் மாத்திரம் செய்யப்பட்டு தூக்கு ஷட்டர்கள் போட்டிருக் கிறார்கள். உண்மையில், 1836 ஆம் வருஷத்தில் ஸர் ஆர்தர் காட்டன் என்பவர் அப்பர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் மேல் அணைக்கட்டு கட்டின வரையில், தஞ்சாவூரார்கள் ஹிந்து அரசர்கள் செய்த பாசன ஏற்பாட்டின் பலனையே அடைந்து வந்தார்கள்.
1801 ஆம் வருஷத்தில் ப்ரிட்டிஷார் தஞ்சாவூரை தமது வசம் அடைந்ததற்கு முன் மாத்திரம் தேசமானது குழப்பமான நிலைமையில் இருந்ததால் காவேரி நீராரம்பங்களின் பாசனம் மிகவும் கெடுதலாயிருந்தது.
கம்பெனியார் தஞ்சாவூரைக் கைவசப் படுத்திக் கொண்டவுடனே காவேரி நீராரம்பங்களின் பாசனத்தை வ்ருத்தி செய்வதற்கு வேண்டிய ப்ரயத்னங்கள் செய்யப்பட்டன.
ஆரம்பத்தில் காவேரியில் உள்ள அதிக மணலை அப்புறப் படுத்துவதிலேயே வெகுவாய் ப்ரயத்னங்கள் செய்யப் பட்டன. ஆனால் அந்த முயற்சிகளால் அதிக பலன் ஒன்றும் உண்டாகவில்லை. கொள்ளி டத்தில் தலைப்பில் அப்பர் அணைக் கட்டுக் கட்டினபிறகுதான் காவேரிக்கு நன்றாய் ஜலம் வரலாயிற்று.
இப்படி மேல் அணைக்கட்டு கட்டினதால் கொள்ளிடத்திலிருந்து பிரியும் வாய்க்கால்களுக்கு ஜலம் குறைந்து போயிற்று. அதனால் வரும் ஜலநஷ்டத்துக்கு ஈடு செய்ய லோயர் அணைக்கட்டு என்று சொல்லப்படும் கீழ் அணைக்கட்டு ஒன்று 70 மையி லுக்கு அப்பால் கட்ட வேண்டியதா யிற்று.
அதன் பிறகு 1887_-1889 ஆம் வருஷத்தில் கல்லணையில் காவேரி, வெண்ணாறு, ஹெட் ரெகுலேடர்கள் கட்டவே, காவேரி, வெண்ணாறு இந்த இரண்டு நதிகளிலும் ஜலம் போவதை ஒழுங்குபடுத்துவது ரொம்ப ஸுலப மாயிற்று.
பிற்பாடு செய்த சீர்திருத் தங்கள் எல்லாம் வெள்ள காலத்தில் ஜலத்தை சீர்படுத்தவும் ஜலத்தை ஸரிவர வாய்க்கால்களில் பாய்ச்சவுமே செய்யப்பட்டவை. இவைகளால் காவேரி பாசன ஏற்பாட்டுக்கும் இந்தி யாவிலுள்ள மற்ற பாசன ஏற்பாடுகளுக் கும் ரொம்ப வித்யாஸமிருக்கிறது.
லேபிள்கள்:
டி.எம்.நாயர்.நீர்ப்பாசனம்.தஞ்சை,
நீதிக்கட்சி
Friday, May 27, 2011
எட்டயபுரத்தில் பண்டைய காலஆவணங்கள் கட்டடம் எரிந்து சாம்பல்
எட்டயபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பண்டைய காலத்து ஆவணங்கள் இருந்த கட்டடம் (ரிக்கார்டு ஆபிஸ் பில்டிங்) திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
எட்டயபுரம் இருபதாவது பட்டம் ஜெகவீரராம கெக்சில் எட்டப்ப நாயக்கர் குமாரர் ஜெகவீரராமகுமார் எட்டப்பநாயக்கர் கொல்லம் 742 ம் ஆண்டு அதாவது கி.பி.1567ம் ஆண்டு தை மாதம் எட்டயபுரம் நகரம் உருவாக்கப்பட்டதாகும். எட்டயபுரம் அரண்மனை வளாகத்திற்குள் அரண்மனை கட்டடம் உட்பட பல்வேறு கட்டடங்கள் உள்ளன. இதில் அரண்மனைக்கு அருகில் ரிக்கார்டு ஆபிஸ் பில்டிங் உள்ளது. இந்த கட்டடத்தில் பண்டைய காலத்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
கட்டடம் எரிந்து இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கல், செங்கல், பதனீர் கலவையுடன் கூடிய சுண்ணாம்பு, கடுக்காய் கலந்து கட்டப்பட்ட கட்டடம். பழமையான ரேக்குகள், விட்டங்கள், உத்திரங்கள் ஆகியவை விலை உயர்ந்த மரங்களினால் ஆனது.
சேதமதிப்பு உடனடியாக கணக்கிட முடியவில்லை. தகவலறிந்து கோவில்பட்டி தீயணைக்கும் படை நிலைய அதிகாரி பொறுப்பு ராமசாமி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சுமார் 1 1/2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நன்றி.தினமலர்.26.05.2011
எட்டயபுரம் இருபதாவது பட்டம் ஜெகவீரராம கெக்சில் எட்டப்ப நாயக்கர் குமாரர் ஜெகவீரராமகுமார் எட்டப்பநாயக்கர் கொல்லம் 742 ம் ஆண்டு அதாவது கி.பி.1567ம் ஆண்டு தை மாதம் எட்டயபுரம் நகரம் உருவாக்கப்பட்டதாகும். எட்டயபுரம் அரண்மனை வளாகத்திற்குள் அரண்மனை கட்டடம் உட்பட பல்வேறு கட்டடங்கள் உள்ளன. இதில் அரண்மனைக்கு அருகில் ரிக்கார்டு ஆபிஸ் பில்டிங் உள்ளது. இந்த கட்டடத்தில் பண்டைய காலத்து ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
கட்டடம் எரிந்து இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கல், செங்கல், பதனீர் கலவையுடன் கூடிய சுண்ணாம்பு, கடுக்காய் கலந்து கட்டப்பட்ட கட்டடம். பழமையான ரேக்குகள், விட்டங்கள், உத்திரங்கள் ஆகியவை விலை உயர்ந்த மரங்களினால் ஆனது.
சேதமதிப்பு உடனடியாக கணக்கிட முடியவில்லை. தகவலறிந்து கோவில்பட்டி தீயணைக்கும் படை நிலைய அதிகாரி பொறுப்பு ராமசாமி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சுமார் 1 1/2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நன்றி.தினமலர்.26.05.2011
Subscribe to:
Posts (Atom)