Sunday, November 13, 2011

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (2) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்

தஞ்சை மாவட்ட நீர்ப்பாசனம்... (2) திராவிடர் பெருந்தகை டி.எம். நாயர்
இந்தப் பாசன ஏற்பாட்டில் மனிதர் களால் வெட்டப்பட்ட சிற்றாறு களாவது பெரிய மதகுகள் போன்ற வைகளாவது கிடையாது. ஜலமெல் லாம் இயற்கையான சிற்றாறுகள் வழியாக நீராரம்பம் எங்கும் பாய்கிறது.

ஜலம் ஸரியானபடி சிற்றாறுகளில் போகிறதா என்று பார்ப்பதிலும், ஒரு ஆற்றில் ஜலம் குறைந்து வயல்கள் காய்ந்து போகாமலும், இன்னொன்றில் ஜலம் அதிகமாய்ப் போய் வயல்கள் கெடுதலடையாமலும் இருக்கும்படி பார்ப்பதில் மட்டும் இஞ்சினீர் இலாகா உத்யோகஸ்தர்கள் கவனம் செலுத்து கிறார்கள். கர்னல் ஸ்மார்ட் என்பவர் நீராரம்பங்களுக்கு ஜலம் ப்ரவேசிக்கு முன் ஜலத்தை ஒழுங்குபடுத்த அவசியமான சீர்திருத்தங்களை செய்து முடித்தார். ஜலம் ஸரிவர பாய வேண்டியதைக் குறித்தும் அவர் ப்ரேரணைகள் செய்தார். ஆனால் கவர்ன்மெண்டார் அவைகளை அனுஷ்டானத்துக்குக் கொண்டு வர யாதொன்றும் செய்யவில்லை.

இந்தியா கவர்ன்மெண்டார் அடைப்பாறு, ஹரிச்சந்த்ர நதி, இந்த இரண்டு நதிகள் ஸம்பந்தமாய் சீர்திருத்தங்கள் செய்யவேண்டு மென்று உத்திரவு செய்தும், அடைப்பாறு ஸம்பந்தப்பட்ட மட்டில் சீர்திருத்தங்கள் செய்யப்பட் டிருக்கின்றன. ஹரிச்சந்த்ர நதி விஷயமாய் இன்னும் ஒன்றும் செய்யப் படவில்லை.

காவேரி நீராரம்ப பாசனமானது தஞ்சாவூர் ஜில்லாவுக்கு உயிர் போலிருக்கிறது. ஆகையால் இந்தக் கான்பரென்ஸானது காவேரி பாசன நிலைமையை நன்றாய் ஆராய்ந்து அதன் குறை குற்றங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாசன ஏற்பாட்டில் அநேக பெரும் குறை பாடுகள் இருக்கின்றன. அவைகள் விவஸாயிகளுக்கு அதிக நஷ்ட முண்டாக்குகின்றன. க்ராமவாஸிகள் இருபது முப்பது வருஷங்களாக அநேக குறைபாடுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தும், அவைகளுக்கு இன் னும் இதுவரையில் ஒரு மோட்சத்தையும் காணோம்.

காவேரி நீராரம்பங்களிலுள்ள குறைகளில் முக்கியமானவைகளாவன:-

1. முக்யமான ஆறுகளில் ஜலம் பக்கங்களிலுள்ள நிலங்களை அறுக் காமல் ஒழுங்காய் ஓட ஸரிவர ஏற்பாடுகள் செய்வதில்லை.

2. சிற்றாறுகள் ஸரிவர பார்வை யில்லாமலும், அவைகளில் ஜலம் விடுவதும், காபந்து செய்வதும் இன்னார் வசமிருக்கிறதென்று தெரியாமலும், ரெவின்யூ டிபார்ட்மெண்டார் பி.டப்ளியு. ஆதீனத்தில் இருக்கிற தென்றும், பி.டப்ளியூ டிபார்ட்மெண் டார் ரெவின்பூ டிபார்ட்மெண்டாரிட மிருக்கிற தென்றும் நினைத்து வருகிறார்கள்.

3. சிற்றாறுகளிலுள்ள மதகுகள் போன்ற அநேக சில்லரைக் கட்டி டங்கள் கவனமில்லாமல் பாழாகிக் கொண்டு வருகின்றன.

4. அநேக சிற்றாறுகளில் ஜல வாட்டம் ஸரியாக இல்லை.

5.அநேக இடங்களில், வெகுவாய் கடல்கரை தாலுகாக்களில், வடிகால் வஸதிகள் ரொம்பவும் கேவல ஸ்திதியில் இருக்கின்றன.

கடல்கரை தாலுகாக்களில் ஸரியான ஜலமில்லை என்ற ஒரு கஷ்டம் மட்டுமல்ல, உதாரணமாய் கடற்கரை தாலுகாவாகிய சீயாழி தாலுகாவை எடுத்துக் கொள்வோம். முதலில், அதற்கு காவேரியிலிருந்து நேரே ஜலம் அநேகமாய் பாசனத்துக்கு வருவதில்லை என்னலாம். வடிகால் ஜலம் பாயும் பழவாற்றிலிருந்து கிடைக்கும் ஜலந் தான் அந்தத் தாலுகாவுக்கு காவேரி யிலிருந்து வரும் பாசன ஜலமாகிறது. காவேரியிலிருந்து அந்தத் தாலு காவுக்குப் போதுமான ஜலம் வருவ தில்லையென்பது வெகு காலத்துக்கு முன்னயே தெரிந்த விஷயம்.

1866 ஆம் வருஷத்தில் கர்னல் ஓக்ஸ் என்பவர் எழுதிய ரிபோர்ட்டில் தெரிவித் திருக்கிறார். காவேரி அணைமேல் 5 அடி ஜலம் ஓடினால் காவேரியை அனுஸரித்த சிற்றாறுகளில் போது மானதும் பூர்த்தியானதுமான ஜலம் போகவேண்டும். ஆனால் காவேரி ஸரிவரயில்லாததால் காவேரி அணை மேல் 7 அடி ஜலம் ஓடினால், அல்லது, ஜில்லாவுக்கு வேண்டிய அளவுக்கு இரண்டு மடங்காக ஜலம் பாய்ந்தால் தான் மாயவரம் தாலுகாவில் போது மான ஜலம் கிடைக்கிறது. அப்பொ ழுதும், சீயாழி தாலுகாவில் ஒரு பாகத் தில் ஜலம் மிகவும் குறைவாக இருந்தது.

வேண்டும் காலத்தில் பாசனத் துக்குப் போதுமான ஜலமில்லாத கஷ்டம் மட்டுமல்ல. ஜூலை மாஸத்தில் ஜலம் கிடைக்காவிட்டால் விவஸாயம் ஆரம்பிக்காமல் வட கிழக்கு மழைக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டி யிருக்கிறது. அது வந்ததும் அதோடு பழவாற்றிலும் வேண்டாத அகாலத்தில் வடிகால் ஜலம் வந்துவிடுகிறது. வடகிழக்குப் பருவ மழையாலும், தாமஸித்து வரும் பழவாற்று ஜலத்தாலும் சீயாழிக்கு வேண்டாத காலத்தில் அதிக ஜலம் வந்து ஒரே வெள்ளமாகிவிடுகிறது. கடற்கரை ஓரமாய் பூமி அதிக வாட்டமா யிராததினால் ஸரியான வடிகால் ஏற்பட இடமில்லாமல் இருக்கிறது. அநேக கெடுதல்களால் சீயாழியில் ஸரியான பாசனமில்லாமல் ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள்.

சீயாழி தாலுகாவில் மூன்று பாசன ஆதாரங்களான ஆறுகளில், கொள் ளிடத்திலிருந்து பிரியும் ராஜன் வாய்க்கால் 14,000 ஏகராவுக்குப் பாய் கிறது. பழவாறு 38,000 ஏகராவுக்குப் பாய்கிறது. காவேரி 6000 ஏகராவுக்குப் பாய்கிறது. கொள்ளிடத்திலிருந்து ராஜன் வாய்க்கால் வழியாக வரும் ஜலம் விவஸாயத்துக்கு போதுமானது.

ஆனால் ஜலம் ரொம்பவும் வீணாகப் போய்விடுகிறதென்று குறைப்பாடா யிருக்கிறது. காவேரியிலிருந்தும், பழவாற்றிலிருந்தும் வரும் ஜலம் பயிரிடும் காலத்தில் மிகக் குறைவ கவும், வடகிழக்கு மழை காலத்தில் வருவதில் கெடுதலுண்டாக்குவதாயு மிருக்கிறது. சீயாழி தாலுக்காவுக்கு ஸரியான வடிகால் ஏற்படுத்துவதைப் பற்றியும், தெற்கு ராஜன் வாய்க் காலையும், குமுக்கு மண்ணியாற்றையும் சீர்திருத்தி அவைகளின் வழியாக அதிக ஜலம் கொண்டு வந்து பழவாற்றிலும் புது மண்ணியாற்றிலும் விட்டு பாச னத்தை வ்ருத்தி செய்வதைப் பற்றியும் ப்ரேரணைகள் செய்யப்பட்டன.

கொள்ளிடத்திலிருந்து கீழ் அணைக் கட்டுக்கு மேல், பழவாற்றுக்கு அதிக ஜலம் விடுவதைப் பற்றியும் ஆலோ சனை செய்தார்கள். என்ன யோசனை செய்தென்ன, என்ன ஆராய்ச்சிகள் செய்து பார்த்து மென்ன, நாளது வரையில், விவஸாயகாலத்தில் போது மான ஜலம் இன்னும் வந்தபாடில்லை.; காலா காலத்தில் விவஸாயம் செய்யாத பட்சத்தில் தகுந்த வேலையாட்கள் கிடைப்பதில்லை. விவஸாய வேலைகள் முடியும் வரையில் போதுமான ஜலம் கிடைப்பதும் கஷ்டமாகிவிடுகிறது.

ஜூலை மாஸத்தில் போதுமான ஜலம் முதல் போக ஸாகுபடிக்குக் கிடைக்கு மானால், சீயாழி மிராசுதார்கள் இரண்டாவது போகம் ஸாகுபடி செய்யக் கூட ஆசைப்படமாட்டார்கள். இப்படி காலா காலத்தில் ஸாகுபடி செய்ய முடியாமலும், வெள்ளம் பாழாய் போய் மாஸூல் கிட்டாததாலும் கடற்கரை தாலுகாக்களிலுள்ள ஜனங்கள் பயமடைந்து அதனால் அநேகர் அந்தத் தாலுகாக்களிலிருந்து பிற விடங்களுக்குக் குடியேறிச் செல்கின்றார்கள்.
(தொடரும்)

No comments:

Post a Comment