Sunday, November 27, 2011

கருப்பு சிகப்பு இதழியல் நூல் குறித்து மீண்டும் கவிக்கொண்டல் இதழ்...

முனைவர் இரா.பாவேந்தன் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
”அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்க இதழியலின் பன்முகத்தன்மையை ஆவணப்படுத்தும் வகையில் கறுப்பு சிகப்பு இதழியல் என்ற தலைப்பிலான தொகுப்பு நூலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன்.இத் தொகுப்பில் கழகக்குரல் ஏட்டில்(1976) ஆம் ஆண்டு தாங்கள் எழுதிய “குற்றம் செய்யத் தூண்டுகிறாதா குமுதம் என்ற தலைப்பிலான் கட்டுரையை இணைக்க விரும்புகின்றேன். இதற்கு ஒப்புதல் வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்”
என கேட்டு மடல் எழுதியிருந்தார்.நானும் உடன் அதற்கு ஒப்புதல் வழங்கினேன்.அத் தொகுப்பு நூல் வெளிவந்த்தும் அவர் எனக்கு அதனை அனுப்பிவைத்தார்.அதில் எனது மூன்று கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.மா.செங்குட்டுவன் என்னும் பெயரில் இரண்டு கட்டுரைகளும் சேனா என்னும் புனைப்பெயரில் நான் எழுதிய கட்டுரை ஒன்றும் அதில் சேர்க்கப்பட்டுருந்தன.1.ஏடுகள் வளர்த்த் இயக்கம்,2.குற்றம் செய்யத்தூண்டுகிறாதா குமுதம்,3.சிரிப்பு தான் வருகுதையா !பலே பாண்டியா என்பவையே அவை.
அந்தக் கட்டுரைகளைப் படித்த போது இப்போதும் அக்கட்டுரைகள் மிகப் பொருத்த்மாகவே இருக்கக் கண்டேன் (இத் தொகுப்பு நூல் பற்றிய் மதிப்புரை பின்னர் வரும்)

சேனா எனப் புனைபெயரில் நான் எழுதிய கட்டுரையைப் படித்துப் பார்த்தால் கம்யூனிஸ்டுத் தோழர் தா.பாண்டியன் அன்று முதல் இன்று வரை கிஞ்சிற்றும் தமது இயல்பினின்று மாறவில்லை என்பது புரியும் அக் கட்டுரை தான் அடுத்தப் பக்கத்தில் வெளியாகியுள்ளது(13-16) அக் கட்டுரையைப் படித்து பாருங்கள்...(மா.செ)
(மா.செங்குட்டுவன் திராவிட இயக்க மூத்த இதழியலாளர்,சென்னையில் வசிப்பவர்)>

நன்றி:மீண்டும் கவிக்கொண்டல் இதழ் நவம்பர் 2011 பக் 12)

No comments:

Post a Comment